Friday, December 25, 2009

கோபம்

கோபம்
----------
கேள்வித் தாளைப்
பார்த்தவுடன்
மறந்துபோகும் பதில்களாய்
இருக்கிறது
உன் மீதான
என் கோபம்!

---------------
ரோஜா

பிகு: விகடனில் இருந்து மருவிய கவிதை :-)

Friday, November 13, 2009

வெறுப்பு

பிரிவு வலியது !

அவள்
என்னுடன் பேசாத இந்த தருணங்களில் தான்
முதன் முறையாக
கவிதைகளையே வெறுக்கிறேன் !
ஒவ்வொன்றும்
அவளைப்பற்றி நினைவு படுத்துவதால் !

----------------
ரோஜா

Saturday, October 31, 2009

பிரித்தெடுத்தல்

நான் உன்மேல் வைத்திருக்கும்
அன்பை விலக்கிவிட்டு,
காதலை விலக்கிவிட்டு,
பாசத்தை விலக்கிவிட்டு,
நேசத்தை விலக்கிவிட்டு,
பரிவை விலக்கிவிட்டு,

நான் எழுதிய
காதல் கவிதைகளை மறந்து விட்டு,

நான் செய்த தவறுகளை மட்டும்
பிரித்தெடுத்து அசை போடுகிறாயே !

நீயென்ன
அன்ன பறவையின்
மறு பிறவியா ?

இல்லை இல்லை
நீ அன்ன பறவையின்
எதிரிடை !
தவறானவற்றை அல்லவா பிரித்தெடுக்கிறாய் !

------------
ரோஜா

Saturday, October 17, 2009

காதல் தோல்வி

நிலவொளி சிந்தும்
இனிய இரவு !

முதுகுகள் மட்டுமே பேசிக்கொள்ளும்
படுக்கை அறையில்
என் மனைவியோடு நான்,
உன் கணவனோடு நீ !

சந்திராயன் ஏறி
பழைய உலகில்
சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன
இருவர் மனமும் !

நம் காதல் தோல்வி பற்றி
ஊர் கி்சுகி்சுப்பது
நம் காதுகளில் விழாமலில்லை !

எது காதல் தோல்வி ?

ம்ம்மென்று வெட்கத்துடன்
நீ என் தோளில் எப்போது சாய்ந்து
சம்மதித்தாயோ,

அன்றே
வென்று விட்டது நம் காதல் !

மற்ற சம்பிரதாயங்களில்
எனக்கு உடண்பாடு இல்லை !

ரோஜா

கோர தாண்டவம்

கோர தாண்டவம் ஆடுகிறான் ராஜபக்ஷே !

தலை கொய்தி எங்கள் தலைவனை
கொன்றுமா அடங்க வில்லை உன் பசி ?
அந்த பிஞ்சு மார்பில்
தோட்டாவை பாய்ச்ச எப்படி தான் மனம் வந்ததோ ?

கேட்பார் எவரும் இல்லை !

விபச்சாரிகளாய் தமிழக மக்கள் !
ஆம்,
ஓட்டுக்காக பணம் பெற்றுக்கொண்டு வைகோ வைத்
தோர்க்கடித்தோமே !

நமக்கென்ன கவலை
பிளாக்கில் டிக்கெட் வாங்கி போய் எந்திரன் பார்க்கலாம் !

-ரோஜா

Friday, April 17, 2009

ஈழம்

ஈழம்

யுத்த பூமியில்
பிறந்ததைத் தவிர
வேரு என்ன
பாவம் செய்தீர்கள் ?

கொத்துக் கொத்தாய்
செத்து
மடியும் என் சொந்தங்கள் !

வேடிக்கை மட்டுமே பார்த்து
வெம்மிப் புடைக்கிறோம் !

நம் கையாலாகாதனத்தை
எண்ணி,
வானம் பார்த்து காரி
உமிழ்வதை தவிர
வேறு என்ன செய்ய ?


எத்துணை கடவுள்கள்,
ஒரு
இனமே அழிவதை
வேடிக்கை பார்த்துக்கொண்டு !

நெஞ்சு பொறுக்க வில்லை
என் உறவுகளே !

ஆனால்,
செய்வதறியா சூழ்நிலைக் கைதிகளாய்
கட்டுண்டு நாங்கள் !

இதற்கு
தீர்வு தான் என்ன ?
விடிவு தான் எப்போது ?

கேள்விகளுடனும், கண்ணீருடனும்
உங்கள் சகோதரன்.

-ரோஜா

Saturday, April 4, 2009

நாம்

உடலோடு உயிர் போனாலும் , என்
உணர்வுகள் காற்றோடு கலந்திடுமே - உந்தன்
நெஞ்சமே தஞ்சமென்று - உன்
மூச்சோடு கலந்திடுமே.....
உன் சிரிப்பினிலே அது வளர்ந்திடுமே....

உடல்கள் வேறானாலும்
உறவுகள் நம்மை பிரித்திருந்தாலும்
நம்
உணர்வுகள் ஒன்று தானே ....
அது என்றும் நம்மை இணைத்திடுமே..........

Tuesday, January 20, 2009

கானல் நீர்

கானல் நீராய்
காணாமலே போகிறது என் காதல் ?

அந்த எமாற்றம் தொலைக்க
என் கண்களை பறித்து விடு !

உன் காதல் மொழி கேட்க வழி இல்லை ?
என் செவிப்பரையை கிழித்து விடு !

இதயம் அடங்கும் முன்
உன் உயிர் கலந்திட வாய்ப்பில்லை ?
என் இதயத் துடிப்பை நிறுத்தி விடு !

மொத்தத்தில் என்னை கொன்றுவிடு !

ஆம்
கருணைக் கொலைகள் தவறில்லை தாம் !

நீ கிடைக்காத பட்சத்தில் சக்கரவாக பறவை போல்
தீக்குழித்து செத்தொழிவதே மேல் !

எது எப்படியோ,
கானல் நீராய் காணமலே போகிறது என் காதல் !
---------
ரோஜா

Monday, January 19, 2009

அகலிகை

அகலிகை

ஓர் கனவு போல் வந்து என் கனவினில்
வாழ்ந்துவிட்டு சென்றுவிட்டாயடி

கஜினி முகமது போல் எத்துணை முறை படை எடுத்தும்
தோற்று விடுகிறேனடி உன்னிடம் ?

காத்திருப்பதும் ஒரு சுகம் தான், உனக்காகத் தானே !

அகலிகையை போல் காத்திருக்கிறென்,
உன் காலடி படாதா என்று !!!!

---------
ரோஜா

Thursday, January 15, 2009

ஒரு நாள் மட்டும்

ஒரு நாள் மட்டும்

கண்டதும் காதல் வயப்பட்டேன் ?

என்று உன்னை கண்டேனோ பெண்ணே
அன்றே எந்தன் உயிரைத் தந்தேனே !

என்ன ஆயிற்று எனக்கு?
என் நினைவுகளிலும் நீ,
என் கனவுகளிலும் நீ

நீயோ உன் பெற்றோறிடம் அணுமதி வாங்கி வரச்
சொல்லி காயப்படுத்துகிறாய் !

நான் எப்பொழுதும் துரதிர்ஷ்டசாலி
நான் தூது விடும் மேகங்கள் கூட உன்னை சேர்வதுக்குள் கரைந்து விடுகின்றன !

நான் கண்ணீரோடு காத்துருக்கிறேன்
என்றாவது ஒரு நாள் என் மனதை புரிந்து கொள்வாய் என்று !

என் கண்ணீர் கூட உன் மனதை கரைக்காவிடில்
காலமாவது உன் இதயத்துக்கு புரிந்த என் காதலை
உன் காதில் ரகசியமாய் ஒலிக்கட்டும் !

துயரம் என்றுமே சுகமாய் இருந்ததில்லை ,
ஆனால் உனக்காக அதை சுமந்து காத்திருக்க முடியும்,
கடைசி வரை !

அந்த ஆண்டவனை பழிக்கிறேன்
நம் விதியை மாற்றி எழுதியமைக்கு !

இறைவனே,
வேண்டுமானால் என் மீதி ஆறு ஜென்மங்களையும் எடுத்துக்கொள்

என்னவளுடன் வாழ ஒரு நாள் கொடு !
ஒரு நாள் மட்டும் !
ஆம் ஒரே ஒரு நாள் மட்டும் !

---------
ரோஜா

Wednesday, January 14, 2009

வேலை

வேளா வேளைக்கு வேலை தேடுவதே
வேலையாகிப்போனது
வேலை தேடுவதையே
வேலையாக்கிக்கொண்ட
பட்டதாரிக்கு
!

ஒரு இனிய கனவு

நேற்று ஒரு இனிய கனவு !
ஓரு தனி தீவு !
என்னவளுடன் நான், நான் மட்டும் !

காற்று கூட சற்று விலகியே வீசுகிறது எங்களை பிரிக்க மனமில்லாமல் !

என்னருகில் என்னவள், அந்த மாலைக் கருக்கலில் தேவதையை போல !
ஓர வஞ்ஜணை செய்து விட்டான் ப்ரஹ்மன் !

என் கண்களால் அவள் விழி மூடிய நிலையில் ஓரு கணம்!

என் மார் மீது அவள் தலை வைத்து தூங்கும் அழகை என்னவென்று நான் சொல்ல !

நான் தட்டி கொடுத்தது தன் தாயின் தாலாட்டு போலிருந்தது போல, என்னை இருக்கிக் கொண்டாள் !

என்னவளுடன் நான், நான் மட்டும் !

எங்களை மரணம் கூட கட்டி அணைத்த நிலையில் தான் சந்திக்க நேரிடும் !

மரணமா ? எங்களுக்கேது மரணம் ?

நாங்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ வரம் கிடைத்து விட்டது !

ஆம்,

அத் தனித்தீவில் ஏன்னவளுடன் நான், நான் மட்டும் !
நான் மட்டும் !நான் மட்டும் !நான் மட்டும் !

---------
ரோஜா