Friday, April 17, 2009

ஈழம்

ஈழம்

யுத்த பூமியில்
பிறந்ததைத் தவிர
வேரு என்ன
பாவம் செய்தீர்கள் ?

கொத்துக் கொத்தாய்
செத்து
மடியும் என் சொந்தங்கள் !

வேடிக்கை மட்டுமே பார்த்து
வெம்மிப் புடைக்கிறோம் !

நம் கையாலாகாதனத்தை
எண்ணி,
வானம் பார்த்து காரி
உமிழ்வதை தவிர
வேறு என்ன செய்ய ?


எத்துணை கடவுள்கள்,
ஒரு
இனமே அழிவதை
வேடிக்கை பார்த்துக்கொண்டு !

நெஞ்சு பொறுக்க வில்லை
என் உறவுகளே !

ஆனால்,
செய்வதறியா சூழ்நிலைக் கைதிகளாய்
கட்டுண்டு நாங்கள் !

இதற்கு
தீர்வு தான் என்ன ?
விடிவு தான் எப்போது ?

கேள்விகளுடனும், கண்ணீருடனும்
உங்கள் சகோதரன்.

-ரோஜா

No comments:

Post a Comment