Tuesday, January 20, 2009

கானல் நீர்

கானல் நீராய்
காணாமலே போகிறது என் காதல் ?

அந்த எமாற்றம் தொலைக்க
என் கண்களை பறித்து விடு !

உன் காதல் மொழி கேட்க வழி இல்லை ?
என் செவிப்பரையை கிழித்து விடு !

இதயம் அடங்கும் முன்
உன் உயிர் கலந்திட வாய்ப்பில்லை ?
என் இதயத் துடிப்பை நிறுத்தி விடு !

மொத்தத்தில் என்னை கொன்றுவிடு !

ஆம்
கருணைக் கொலைகள் தவறில்லை தாம் !

நீ கிடைக்காத பட்சத்தில் சக்கரவாக பறவை போல்
தீக்குழித்து செத்தொழிவதே மேல் !

எது எப்படியோ,
கானல் நீராய் காணமலே போகிறது என் காதல் !
---------
ரோஜா

Monday, January 19, 2009

அகலிகை

அகலிகை

ஓர் கனவு போல் வந்து என் கனவினில்
வாழ்ந்துவிட்டு சென்றுவிட்டாயடி

கஜினி முகமது போல் எத்துணை முறை படை எடுத்தும்
தோற்று விடுகிறேனடி உன்னிடம் ?

காத்திருப்பதும் ஒரு சுகம் தான், உனக்காகத் தானே !

அகலிகையை போல் காத்திருக்கிறென்,
உன் காலடி படாதா என்று !!!!

---------
ரோஜா

Thursday, January 15, 2009

ஒரு நாள் மட்டும்

ஒரு நாள் மட்டும்

கண்டதும் காதல் வயப்பட்டேன் ?

என்று உன்னை கண்டேனோ பெண்ணே
அன்றே எந்தன் உயிரைத் தந்தேனே !

என்ன ஆயிற்று எனக்கு?
என் நினைவுகளிலும் நீ,
என் கனவுகளிலும் நீ

நீயோ உன் பெற்றோறிடம் அணுமதி வாங்கி வரச்
சொல்லி காயப்படுத்துகிறாய் !

நான் எப்பொழுதும் துரதிர்ஷ்டசாலி
நான் தூது விடும் மேகங்கள் கூட உன்னை சேர்வதுக்குள் கரைந்து விடுகின்றன !

நான் கண்ணீரோடு காத்துருக்கிறேன்
என்றாவது ஒரு நாள் என் மனதை புரிந்து கொள்வாய் என்று !

என் கண்ணீர் கூட உன் மனதை கரைக்காவிடில்
காலமாவது உன் இதயத்துக்கு புரிந்த என் காதலை
உன் காதில் ரகசியமாய் ஒலிக்கட்டும் !

துயரம் என்றுமே சுகமாய் இருந்ததில்லை ,
ஆனால் உனக்காக அதை சுமந்து காத்திருக்க முடியும்,
கடைசி வரை !

அந்த ஆண்டவனை பழிக்கிறேன்
நம் விதியை மாற்றி எழுதியமைக்கு !

இறைவனே,
வேண்டுமானால் என் மீதி ஆறு ஜென்மங்களையும் எடுத்துக்கொள்

என்னவளுடன் வாழ ஒரு நாள் கொடு !
ஒரு நாள் மட்டும் !
ஆம் ஒரே ஒரு நாள் மட்டும் !

---------
ரோஜா

Wednesday, January 14, 2009

வேலை

வேளா வேளைக்கு வேலை தேடுவதே
வேலையாகிப்போனது
வேலை தேடுவதையே
வேலையாக்கிக்கொண்ட
பட்டதாரிக்கு
!

ஒரு இனிய கனவு

நேற்று ஒரு இனிய கனவு !
ஓரு தனி தீவு !
என்னவளுடன் நான், நான் மட்டும் !

காற்று கூட சற்று விலகியே வீசுகிறது எங்களை பிரிக்க மனமில்லாமல் !

என்னருகில் என்னவள், அந்த மாலைக் கருக்கலில் தேவதையை போல !
ஓர வஞ்ஜணை செய்து விட்டான் ப்ரஹ்மன் !

என் கண்களால் அவள் விழி மூடிய நிலையில் ஓரு கணம்!

என் மார் மீது அவள் தலை வைத்து தூங்கும் அழகை என்னவென்று நான் சொல்ல !

நான் தட்டி கொடுத்தது தன் தாயின் தாலாட்டு போலிருந்தது போல, என்னை இருக்கிக் கொண்டாள் !

என்னவளுடன் நான், நான் மட்டும் !

எங்களை மரணம் கூட கட்டி அணைத்த நிலையில் தான் சந்திக்க நேரிடும் !

மரணமா ? எங்களுக்கேது மரணம் ?

நாங்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ வரம் கிடைத்து விட்டது !

ஆம்,

அத் தனித்தீவில் ஏன்னவளுடன் நான், நான் மட்டும் !
நான் மட்டும் !நான் மட்டும் !நான் மட்டும் !

---------
ரோஜா