Thursday, January 15, 2009

ஒரு நாள் மட்டும்

ஒரு நாள் மட்டும்

கண்டதும் காதல் வயப்பட்டேன் ?

என்று உன்னை கண்டேனோ பெண்ணே
அன்றே எந்தன் உயிரைத் தந்தேனே !

என்ன ஆயிற்று எனக்கு?
என் நினைவுகளிலும் நீ,
என் கனவுகளிலும் நீ

நீயோ உன் பெற்றோறிடம் அணுமதி வாங்கி வரச்
சொல்லி காயப்படுத்துகிறாய் !

நான் எப்பொழுதும் துரதிர்ஷ்டசாலி
நான் தூது விடும் மேகங்கள் கூட உன்னை சேர்வதுக்குள் கரைந்து விடுகின்றன !

நான் கண்ணீரோடு காத்துருக்கிறேன்
என்றாவது ஒரு நாள் என் மனதை புரிந்து கொள்வாய் என்று !

என் கண்ணீர் கூட உன் மனதை கரைக்காவிடில்
காலமாவது உன் இதயத்துக்கு புரிந்த என் காதலை
உன் காதில் ரகசியமாய் ஒலிக்கட்டும் !

துயரம் என்றுமே சுகமாய் இருந்ததில்லை ,
ஆனால் உனக்காக அதை சுமந்து காத்திருக்க முடியும்,
கடைசி வரை !

அந்த ஆண்டவனை பழிக்கிறேன்
நம் விதியை மாற்றி எழுதியமைக்கு !

இறைவனே,
வேண்டுமானால் என் மீதி ஆறு ஜென்மங்களையும் எடுத்துக்கொள்

என்னவளுடன் வாழ ஒரு நாள் கொடு !
ஒரு நாள் மட்டும் !
ஆம் ஒரே ஒரு நாள் மட்டும் !

---------
ரோஜா

No comments:

Post a Comment