நான் உன்மேல் வைத்திருக்கும்
அன்பை விலக்கிவிட்டு,
காதலை விலக்கிவிட்டு,
பாசத்தை விலக்கிவிட்டு,
நேசத்தை விலக்கிவிட்டு,
பரிவை விலக்கிவிட்டு,
நான் எழுதிய
காதல் கவிதைகளை மறந்து விட்டு,
நான் செய்த தவறுகளை மட்டும்
பிரித்தெடுத்து அசை போடுகிறாயே !
நீயென்ன
அன்ன பறவையின்
மறு பிறவியா ?
இல்லை இல்லை
நீ அன்ன பறவையின்
எதிரிடை !
தவறானவற்றை அல்லவா பிரித்தெடுக்கிறாய் !
------------
ரோஜா
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment