தியா
-----------------------------------------
தியா - என் மூன்று வயது மகள்
ஒரு இனிய இரவு,
அவளை தட்டிக்கொடுத்துக்கொண்டே,
கதைகள் சொல்லிக்கொண்டிருந்தேன்,
கதையின் திருப்பங்களுக்கேர்ப்ப
அந்த பிஞ்சு முகத்தில் தான் எத்தனை மாற்றம்,
நான்கு கதைகளுக்கு அப்பால் உறங்கிப்போனாள்,
அவள் தலை கோதியபடி அவளை ரசித்துக்கொண்டு நான்,
அவளின் மூடிய விழிகள் மெல்லத்திறந்தன,
என் மூக்கில் ஒரு முத்தமிட்டு,
"i love u appa" என்று சொல்லிவிட்டு
உறங்கிப்போனாள் !
நான் உறங்கத்தான் சில நாழிகைகள் ஆயிற்று !
பிரசவ வலி இல்லா பிள்ளைப்பேற்றின் ஆனந்தம் அடைந்தேன் !
இனி ஆண்களும் சம உரிமைக்காகப் போராடப் போகிறோம்,
எங்களுக்கும் வேண்டும் தாய்மை அடையும் வரம் !
இன்னொரு நாள்,
இளங்காலைப்பொழுது, அவசர கதியில்
அரக்கப் பரக்க ஓடிக் கொண்டு நான்,
திடீரென்று என் கால்களில் ஒரு பாரம்,
என் கால்களைக் கட்டிக்கொண்டு தியா,
அவளை அப்படியே அள்ளி எடுத்து,
நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக்கொண்டு
என்னடா என்று வினாவினேன் ?
இன்றைக்கு ஒரு நாள் அலுவலகம் செல்லாமல்,
என் கூடவே விளையாடுவியா "please" என்றாள் !
வேறு என்ன பாக்கியம் வேண்டும் ஒரு அப்பனுக்கு,
தாயுமானவன் ஆனேன் !
-----------------------------------------
தியா - என் மூன்று வயது மகள்
ஒரு இனிய இரவு,
அவளை தட்டிக்கொடுத்துக்கொண்டே,
கதைகள் சொல்லிக்கொண்டிருந்தேன்,
கதையின் திருப்பங்களுக்கேர்ப்ப
அந்த பிஞ்சு முகத்தில் தான் எத்தனை மாற்றம்,
நான்கு கதைகளுக்கு அப்பால் உறங்கிப்போனாள்,
அவள் தலை கோதியபடி அவளை ரசித்துக்கொண்டு நான்,
அவளின் மூடிய விழிகள் மெல்லத்திறந்தன,
என் மூக்கில் ஒரு முத்தமிட்டு,
"i love u appa" என்று சொல்லிவிட்டு
உறங்கிப்போனாள் !
நான் உறங்கத்தான் சில நாழிகைகள் ஆயிற்று !
பிரசவ வலி இல்லா பிள்ளைப்பேற்றின் ஆனந்தம் அடைந்தேன் !
இனி ஆண்களும் சம உரிமைக்காகப் போராடப் போகிறோம்,
எங்களுக்கும் வேண்டும் தாய்மை அடையும் வரம் !
இன்னொரு நாள்,
இளங்காலைப்பொழுது, அவசர கதியில்
அரக்கப் பரக்க ஓடிக் கொண்டு நான்,
திடீரென்று என் கால்களில் ஒரு பாரம்,
என் கால்களைக் கட்டிக்கொண்டு தியா,
அவளை அப்படியே அள்ளி எடுத்து,
நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக்கொண்டு
என்னடா என்று வினாவினேன் ?
இன்றைக்கு ஒரு நாள் அலுவலகம் செல்லாமல்,
என் கூடவே விளையாடுவியா "please" என்றாள் !
வேறு என்ன பாக்கியம் வேண்டும் ஒரு அப்பனுக்கு,
தாயுமானவன் ஆனேன் !

No comments:
Post a Comment